திருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை
அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலியின்
உண்மையான அர்த்தம் 'புகழ்மிகும் நெல்லின் வேலி'.
இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட
இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருந்ததால் இந்தப்பகுதி மக்களை முதலில்
பார்த்துவிடலாம்.
சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில்
இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில்
தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக
புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் 'உள்ளே வெளியே'
என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும்
உண்டு. அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின்
ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில்
சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில்
இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை
உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.
நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு
பனைமரம் ஏராளமாகத் தெரியும். கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும்
பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை
வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில்
உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர்
போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே
தெரியும்.
மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய
மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த
பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும்
மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும்.
தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த
காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான
பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட
அமிழ்ந்து போயுள்ளன. இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும்
நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச
சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து
கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. பொருளாதாரம் மற்றும்
அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி
ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது. நாடார்
என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு.
குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,
சுருக்கு பட்டையர்
பனைத் தொழிலை சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்த சுருக்கு பட்டையராகத் தான் இருக்கின்றனர்.
மேல் நாட்டார்,
தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும்
வசிக்கின்றனர். இந்த வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திர பகுதியிலும்,
சொல்லக்கூடிய வகையில் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி
போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
நட்டாத்தி
நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச்
சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில்
சொற்பமாகவே இருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்பது, மற்ற வாணிபம்,
விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில் இந்த வகையில்
உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர்.
கொடிக்கால்
வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள்.
இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட
வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு
இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில்
ஜெயித்தும் காட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய
தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின்
குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை
எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு
கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே
நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை
குறிப்பிடுகிறார்கள்.
ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன்
ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் "எல்லாமே"
சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது. இந்த குழந்தைகளை பூமியில்
விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான
பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி
பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து
கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும்
"நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து
நின்றனர். மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே
தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால்
கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக்
கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன்
மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான்,
இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று
சரித்திரங்களில் இருக்கிறது. ஆனால் பெண்கள் ரவிக்கை போடக்கூடாது, நாடார்
இன மக்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது போன்ற பல கேவலங்களைத்தாண்டி இன்று இந்த
சமூக மக்கள் வந்துள்ள உச்சம் மெச்சத்தகுந்ததே.
தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது.
ReplyDeleteசமுதாயத்தை பிரித்த பீத்தி புருடாக்கள்
-- நன்றி
எல்லோரும் நல்ல நாடார் போல் உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!
ReplyDeleteஎல்லோரும் நல்ல நாடார் போல் உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!
ReplyDeleteநாடார் என்பதில் பெருமை கோல்கிரேன்🙏🙏💪💪💪
ReplyDelete