Saturday, 14 September 2013

நாடார்கள் வரலாறு

திராவிட இனத்தின் மிகப்பெரும் ஜாதியாக நாடார் சமுதாயம் விளங்கியது. ஆரியர்கள் படையெடுப்பால் திராவிடர்கள் பலவாறு பிரிய ஆரம்பித்தனர். நம் சமுதாய மக்கள் இயற்கையிலே உடல் வலிமை, கடும் உழைப்பிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அதாவது உண்மையான சத்திரியகுலம் நாடார் குலம் தான்.
பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் நாடார் குலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. அதற்கு சரியான ஆதாரமும், வலுவான கருத்துக்களும் நம்மிடம் உள்ளது. நாயக்க மன்னர்கள் படையெடுப்பால் நம் அரச குலம் சொல்லொன்னா துயரம் அடைந்தது. நம் சமுதாயம் சிதறி பெரும்பகுதி மக்கள் இலங்கைக்கு சென்றனர். இந்தியாவில் இருந்தவர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கமுடியாத தேரிப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் வசிக்கதொடங்கினர். நாடாண்டகுலம் நாடு பிடுங்கப்பட்டு காடு விரட்டப்பட்டு கடுந்துன்பம் அடைந்தது. நம் வரலாறுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டன. இலங்கை மற்றும் நம் ஆட்சிக்கு அப்பார்பட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாகவே நாம் நம் பெருமைகளை அறிய முடிந்தது.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டுவந்தனர். இந்த மூவருமே சகோதரர்கள் எனவும் பாண்டியன் மூத்தவன் எனவும் வரலாறு கூறுகின்றது. ஆரம்ப காலத்தில் கொற்கை தலைநகராக இருந்தது. பின் அது பாண்டிய நாட்டின் தலைநகராக மாறியது. பாண்டியனின் துறைமுகமும் கொற்கைதான்.
1292 ல் மதுரை பாண்டியனின் தலைநகர் ஆனது. பழையகாயல் பாண்டியனின் துறைமுகம் ஆனது. கொற்கை பொலிவு இழந்தது. இந்த கொற்கை இன்று கடலில் இருந்து பலகிலோமீட்டர் தொலைவில் பனைமரக்காடாய் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் முகமதியர் பாண்டியமன்னனை வென்றனர். அதன் பின் மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் பாண்டிய அரசு தோற்றது. சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் அழிக்கப்பட்டன. அரசகுலம் நாடுவிரட்டப்பட்டனர்.
இலங்கை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில் நாடார் சமுதாயம் காணப்படுகின்றது. மேற்படி இடங்களில் சில இடங்களில் சில பெயர் மாறுதலுடன் நாடார்கள் வாழ்கின்றார்கள். ராவணனின் தலைமை அமைச்சரும் பிரதான தளபதியுமான மகோத்திரா நாடார் என்பதும் சீதையை ராவணன் கடத்திய ஆடி மாதம் முதல் தேதியை விழாவாக நாடார்கள் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச உரிமை மறுக்கப்பட்ட நாடார் சமுதாயத்தில் பெரும்பான்மை நாடார் சமுதாயம் பனையேறும் தொழில் செய்து வந்தனர். அவர்கள் பிற சாதி மக்களுடன் இருந்து ஒதுங்கி வாழ்ந்தனர். அவர்கள் பிறப்பு முதல் திருமணம், இறப்பு வரை அவர்களுக்கு ஷஷஅம்பட்டையர்கள்ஷஷ எனப்படும் நாவிதர்கள் தான் அனைத்து சடங்குகளையும் செய்தனர். நாடார்களுக்கு என உள்ள நாவிதர்கள் வேறு உயர்ந்த சமூகத்திற்கோ அல்லது தாழ்ந்த சமூகத்திற்கோ செல்ல மாட்டார்கள். நாடார்களுக்கு என கோவில்களில் பூஜை செய்ய பிராமண வகுப்பில் ஒரு பிரிவானவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் குருக்கள் என அழைக்கப்பட்டனர்.
தெந்தமிழகத்தில் உள்ள நாடார்களின் பூர்வீக குல தெய்வங்களின் கோவில்கள் ஷஷமானாடு தண்டுபத்துஷஷ எனப்படும் திருச்செந்தூர் அடுத்து உள்ள தேரிப்பகுதியை சுற்றியே அமைந்துள்ளது. ராமநாதபுரத்தின் வடபகுதியிலும் குல கோவில்கள் உள்ளன.

14 comments:

  1. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்

    ReplyDelete
  2. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete
  3. துளு படையெடுப்பு

    கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசரின் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

    நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.


    துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலாத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலாத்திரி வம்சத்தை நிறுவினார்.

    இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது. கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.


    கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
    அவை

    1. கண்ணூரின் கோலாத்திரி வம்சம்
    2. கோழிக்கோடு சாமுதிரி வம்சம்
    3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
    4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்



    தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

    துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

    கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

    1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்டா வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

    நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.



    ReplyDelete
  4. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  5. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    ReplyDelete
  6. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  7. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    ReplyDelete
  8. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  9. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  10. The Casino Poker Software Review
    The best casino poker software provider 벳 3 and 버 슬롯 a casino review, 온라인슬롯사이트 as well as a list 텐벳먹튀 of best slots to play in the 강인경 마루에몽 UK and Malta. CasinoRatingReview by CasinoTop100

    ReplyDelete
  11. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  12. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete
  13. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3 பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், வில்லவர், வில்லார். வில்லவராயர், சோழர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்

    ReplyDelete


  14. நாடார் குலங்களுக்கு இணையான கர்நாடகாவின் பாண-பாண்டியன் வம்சங்களில் உள்ள குலங்கள்

    தமிழகத்தின் வில்லவர் குலத்தின் வட உறவினர்கள் பாணர்கள். பாணர்கள் உறவினர்கள் ஆனால் அவர்கள் வில்லவர் வம்சங்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர். வில்லவர் உயர்குடிகளின் பட்டங்களைப் போலவே பாண உயர்குடியினருக்கும் பட்டங்கள் இருந்தன. நாடாவா, நாடாவரா மற்றும் நாடோர் ஆகியவை கடலோர கர்நாடகா மற்றும் கோவாவின் பாண பிரபுக்களால் பயன்படுத்தப்பட்ட பட்டங்கள்.
    நாடாவரா என்பது வில்லவர் பிரபுத்துவத்தில் காணப்படும் நாடாழ்வார் அல்லது நாடார் பட்டத்தின் மாறுபாடாக இருக்கலாம்


    நாடாவா

    கர்நாடகாவின் தட்சிண கன்னடப் பகுதிகளில் அமைந்துள்ள துளுநாட்டில் உள்ள ஆலுபா(ஆளுப அரசு) பாண்டிய ராஜ்ஜியத்தில் இருந்த பாண பிரபுத்துவம் நாடாவா என்று அழைக்கப்பட்டது. துளுநாட்டில் துளு பேசும் பண்ட் சமூகத்தின் கன்னடம் பேசும் துணைக்குழுவாக நாடாவார்கள் இருந்தனர். பண்ட் அல்லது பந்தரு என்பது பிணைக்கப்பட்ட மக்களைக் குறிக்கிறது. பாண்ட் மற்றும் பாண்ணாயா என்பது அவர்களின் பாண வம்சாவளியைக் குறிக்கும் மற்ற சொற்கள்.

    உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து வந்த நாகர்களின் கலவையின் காரணமாக, பண்ட்கள் தாய்வழி மரபு மற்றும் நாக வழிபாட்டை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நேபாள மக்களைப் போன்ற வெளுத்த நிறத்தையும் கொண்டுள்ளனர். நாடாவாக்கள் முன்பு தந்தை வழி வாரிசுரிமையை பின்பற்றி வந்தார்கள், ஆனால் கடந்த சில நூறுகளில் அவர்கள் தாய்வழி வாரிசுரிமையை ஏற்றுக்கொண்டனர். நாடாவாக்கள் இந்து மற்றும் ஜைன மதங்களை பின்பற்றுகின்றனர்.
    உத்தர பாஞ்சால நாட்டில் உள்ள அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நாயர்கள் நாகா இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் துளு பண்ட் சமூகத்தின் நாக துணைக்குழுக்களாக இருந்தனர். நாயர்கள் பண்ட்களிருந்து பிரிந்து, கி.பி 1120 இல் பாணப்பெருமாள் தலைமையில் கேரளா மீது படையெடுத்தனர்.


    உத்தர கன்னடத்தின் நாடாவரா

    உத்தர கன்னடத்தின் நாடாவரா குலங்கள் கோகர்ண பாண்டிய வம்சம் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தின் பிரபுத்துவம் ஆவர். துளுநாட்டின் ஆலுபா இராச்சியத்தில் உள்ள அவர்களது சகாக்களைப் போலல்லாமல், உத்தர கன்னட நாடாவரா தந்தைவழி வாரிசுரிமையை மட்டுமே பின்பற்றினார். வட கன்னட நாடாவர்கள் நாக குலங்களுடன் கலக்கவில்லை என்பதை இது குறிக்கிறது. நாடாவராகள் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் சமண மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார்கள்.

    நாடாவராவின் பிராந்திய மாறுபாடுகள் பின்வருமாறு உச்சரிக்கப்படுகின்றன: நாடாவரா, நாடாவா, நாடாவராவ், நாடாவ், நாட்கிச்சி, நாட்கே, நாடிக், மற்றும் நாட்வி.


    கோவா கடம்ப இராச்சியம் மற்றும் கோகர்ண பாண்டியன் இராச்சியத்தின் நாடோர்

    அங்கோலா மற்றும் கோகர்ணா பகுதியில் நாடோர் சமூகம் ஆதிக்கம் செலுத்துகிறது. கடலோர கார்வார், அங்கோலா, கும்றா தாலுகாக்களில் இவர்கள் காணப்படுகின்றனர்.

    கோவா கடம்பா இராச்சியத்தின் நாடோர் சமூகம் இரண்டு துணைக்குழுக்களைக் கொண்டுள்ளது.

    1. உப்பு நாடோர்
    2. தோற்கே நாடோர்


    கடலோர கர்நாடகாவில் பாண குலங்கள்

    ஆல்வா, பல்லாள், பாண்த், பண்டாரி, பில்லவா, பில்லவா-நாடாவரு, பண்ட், சௌதா, ஹெக்டே, நாடாவரு, நாடோர், நவதாரு, பரிவார பண்ட், பரிவார பாண்ட் , செமிதா, ஷெட்டி, தோற்கே நாடோர், துளு பில்லவா, உப்பு நாடோர், பகாட் போன்றவை.


    ஆல்வா=ஆள்வார்
    பல்லாள்=வல்லாளன்
    பாண்த்= பாணர்
    பண்டாரி=பாணர்
    பில்லவா=வில்லவர்
    நாடாவரு= நாடார்
    பரிவார பண்ட்=பரிவார பாணர்
    பரிவார பாண்ட்=பரிவார பாணர்
    ஷெட்டி=செட்டி
    நாடோர்=நாடார்
    உப்பு நாடோர்=உப நாடார்


    __________________________


    நாடாவா மற்றும் பண்ட்டுகள்


    https://en.m.wikipedia.org/wiki/Bunt_(community)

    _____________________________


    உத்தர கன்னடத்தின் நாடாவரா


    https://en.m.wikipedia.org/wiki/Nadavara


    _____________________________


    உத்தர கன்னடம் மற்றும் கோவா கடம்ப இராச்சியத்தின் நாடோர்


    https://en.m.wikipedia.org/wiki/Nador_(caste)

    _____________________________


    நாடாவரா குலங்களின் தோற்றம்


    https://www.academia.edu/8353455/Origin_of_the_Nadavara_clan


    ராஷ்டிரகூட மற்றும் காலச்சூரி சாம்ராஜ்யங்களுடனான நாடாவரா தொடர்பு


    _____________________________

    ReplyDelete